Friday, August 15, 2014

முடக்கு வாதம் ( rheumatism) கை கால் முட்டிகளில் வீக்கம்

முடக்கு வாதம் ( rheumatism)
கை கால் முட்டிகளில் வீக்கம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உஷ்ண மிகையினால் பிரிக்கப்பட்ட நீர் முட்டிகளில் தங்கி இப்பிணி மிக்க உபத்திரவத்தைக் கொடுக்கும் இதர்க்கு முடக்குவாதம் மென்பர் சிலர் தோள்களில் கண்ணுக்குத் தெறியாத வீக்கங்கண்டு கை தூக்க முடியாமல் சங்கடப்படுவர் கையை ஆட்டும்போது பொறுக்க முடியாத வலியுமிருக்கும் இதற்கு ஆங்கில மருத்துவத்தில் arthritis rheumatism என்பர் ரத்தக்குறைவினாலும் நரம்பு தளர்ச்சினாலும் அல்லது மனச் சஞ்சலத்தினாலும் இப்பிணி வருவதுண்டு கணுக்களில் வலியும் வீக்கமும் ஏற்படும் இப்பிணிக்கு முதல் மருந்து புலால் உண்ணுவதை நிறுத்துவதே புலாலில் 100க்கு 90பங்கு அழுக்குத் தண்ணீர்ருள்ளதென்பதை விஞ்ஞான மேதாவிகள் கண்டுபிடித்துள்ளனர் சுலபமாய் சீரணிக்கக்கூடிய காய்கறிப் பொருள்களையே உபயோகம் செய்யவேண்டும் மனக்கவலை ஒதுக்கி வைக்கவேண்டும் 

இதர்க்கு மருந்து :
முடக்கத்தான் மூலிகை இலை ஒருகைபிடி தோல் நீக்கிய சுக்கு பத்து கிராம் ஓரு ஆழாக்கு துவரம்பருப்பை வறுத்து தண்ணீரிலிட்டு ஷெ இலையை நறுக்கியும் சுக்கை தட்டியும் ஷெ தண்ணீரிலிட்டு கொதிக்கவைத்து சோம்பு கொஞ்சம் போட்டு நன்றாய் வெந்தபிறகு வடித்து மிளகுபொடி உப்பு கொஞ்சம் சேர்த்து சூப் மாதிரி சாப்பிடவும் காலை மாலை ஐந்து நாட்கள் சாப்பிடவும் பத்து நாள்கள் சாப்பிட்டாலும் குற்றமில்லை முடக்கு வியாதி குணமாகும் நன்றி திருசிற்றம்பலம்

காரிகாலன் சித்தமருத்துவர்

No comments:

Post a Comment