Saturday, September 14, 2013

மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா?


மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா? சிறுநீர் , மலம், சளி , போன்ற கழிவுகளில் இருந்து கண்டுபிடிக்கப்படும் ஆய்வுகள் அனைத்தும் தவறே, உடல் தேவையற்ற கழிவுகளை மட்டுமே வெளியேற்றுகிறது. கழிவுகளில் இருந்து நோயை தோரயமாக அறியலாமே தவிர நோயை குணப்படுத்த முடியாது. வீட்டுக்கு வெளியே உள்ள சாக்கடையை ஆராய்ந்து விட்டு , வீட்டுக்குள் சகதி உள்ளது என்பதற்கு சமம். நம் சிறுநீரகம் மிகச்சரியாக இருக்கிறது. அது சரியாக இருப்பதால் தான் கழிவுகளை உள்ளிருந்து பிரித்து அனுப்புகிறது. ரத்தத்தில் இருக்கும் பித்தம் சிறுநீர் வழியாக வெளியேறத்துவங்கி விட்டது. அதாவது உடல் தன் கழிவு நீக்க வேலையைத் துவங்கி விட்டது. அது விரைவில் முழுமையாக வெளியேற்றிவிடும். அப்படி சிறுநீரின் மூலம் வெளியேறினால் தான் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். எந்த அளவு சிறுநீரில் உள்ள பித்தம் அதிகமாகிறதோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் ரத்தத்தில் உள்ள பித்தம்தான் நீரின் வழியாக வெளியேறுகிறது. அது விரைவில் வெளியேறினால் ரத்தம் சுத்திகரிப்படையும். இவ்வாறு நம் கழிவு நீக்க உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றத் துவங்கி விட்டால் நாம் குணமாகி வருகிறோம் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடல் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு எதிர்ப்பு சக்தியைப்பெற்று இருக்கிறது என்று மகிழ்ச்சி அடைய வேண்டும். பசி உள்ளபொழுது உங்கள் மனம் எந்த சுவையை விரும்புகிறதோ அந்த உணவை ருசித்து மெதுவாக உண்ணுங்கள், ஏற்கனவே உங்கள் உடலில் உள்ள நோய்கள் குணமாகி , இனிமேல் எந்த ஒரு நோயும் உங்களை நெருங்காது.

No comments:

Post a Comment