Saturday, May 31, 2014

கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!

அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. இப்போது அந்த கொத்தமல்லி இலைகளின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போமா!!!
http://sithamarunthu.blogspot.in/

Friday, May 30, 2014

எலும்புகளை பலப்படுத்தும் கொய்யா...

எலும்புகளை பலப்படுத்தும் கொய்யாகொய்யாவின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கொய்யா, அதிக சத்துகளைக் கொண்டதாகத் திகழ்கிறது. கொய்யா கோடைக் காலத்தில்தான் அதிகமாக விளையும். தற்போது உயிரித் தொழில்நுட்ப முறையில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. 

கொய்யாவில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லிக்கு அடுத்து அதிக வைட்டமின் 'சி' சத்து உள்ள பழம் கொய்யாதான். கொய்யாவின் பிற மருத்துவ குணங்கள்... 

நோயின் ஆரம்பமே மலச்சிக்கல் தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்து தான் தொடங்கும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும். தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. 

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தேங்காய் எண்ணெய்

தேங்காய், நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, சிறந்த மருத்துவப் பொருளும்கூட என்கிறது சித்த மருத்துவம். 

தேங்காயில் உள்ள 'பேட்டி ஆசிட்' (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச்சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம், தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். 

ஆஸ்துமாவை நீக்கும் கண்டங்கத்திரி வேர்

கண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. விதைகளை எரித்த புகை ஆஸ்துமா நோயில் சளி அகற்று வியாக உதவுகிறது. பல்வலி போக்குகிறது. 

இலைகளின் சாறு மிளகுடன் சேர்த்து மூட்டு வலிகளுக்கு மருந்தாகிறது. வாந்தி நிறுத்தக்கூடியது. சிறுநீர் போக்கு தூண்டுவி. மார்பு வலி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகும். தசமூலா என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.

கல்லீரலை பலப்படுத்தும் எலுமிச்சை

* சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத் தொல்லைகள் நீங்கும். 

சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும் வெந்தயம்

ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற  அளவில், காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம். 

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும். 

இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக  காணப்படும். வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம். 

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு  அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

Thursday, May 29, 2014

பாரம்பரிய நெல் அல்லது அரிசி கிடைக்கும்

பாரம்பரிய நெல் அல்லது அரிசி கிடைக்கும் :
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள் நேரடியாக விவசாயிகளிடமே வாங்க கீழ் கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு :
1.விலை மற்றும் அரிசியின் தரத்தை சோதித்துக் கொள்ளவும்.
2.இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான எங்களின் முயற்சி . )
தொலைபேசி எண்கள் :
1.கருடன் சம்பா , பூங்கார்( சிகப்பு ) , குள்ளத்தார்( சிகப்பு ) , கருங்குறுவை ஆகிய அரிசி & விதைநெல் ரகங்களுக்கு பாண்டிச்சேரி , கிருஷ்ணமூர்த்தி : 99432 49900
2.வெள்ளைப் பொன்னி அரிசிக்கு கருணாகரன் , வத்தாரயிருப்பு, விருதுநகர் மாவட்டம் : 90472 73009
3.ஆடுதுறை 50 அரிசிக்கு சுப்பாராஜ், விருதுநகர் மாவட்டம் : 93445 09193.
பாரம்பரிய நெல் அல்லது அரிசி பயன்படுத்த விரும்பும் நண்பர்களுக்காக இதனை அவசியம் பகிரவும்..!

Thursday, May 22, 2014

கத்தரிக்காய்

கத்தரிக்காய்
மருத்துவக் குணங்கள்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாகும். கத்தரிப்பிஞ்சும், முற்றிய காய்களும் சமைத்து உண்ண உபயோகப்படுகின்றன. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால்  நாம் சாப்பிடும்  மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்  கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பாரிசவாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகல்கிறது. உடல் வலுவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது  முதலியவையும் தடுக்கப்படுகிறது. முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம். கத்தரிவற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். இந்தியாவில் தோன்றியது கத்தரிக்காய். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிர்  செய்யப்பட்டு வருகிறது. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய  நாடுகளின் முக்கிய காய்கறிப்  பதார்த்தமாய் இப்பொழுதும் இருந்து வருகிறது. மத்திய தரைக்கடல் நாடுகளிலும், பால்கன் பகுதிகளிலும் முக்கிய உணவாகக் கத்தரிக்காயைப் போற்றி உண்ணுகின்றனர். அமெரிக்காவின் முக்கியமான முதன்மையான 22 காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாய் விளங்குகிறது. உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் ஊதா அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். அவை இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும். 

தூதுவளை

மருத்துவக் குணங்கள்:
  1. தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
  2. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
  3. தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
  4. தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
  5. வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
  6. தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.
  7. தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
  8. காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
  9. மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.
  10. தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.
  11. தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
  12. தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும். பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.
  13. தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.
  14. தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.http://sithamarunthu.blogspot.in/

Sunday, May 18, 2014

பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )

பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்........... ( இய‌ற்கை வைத்தியம் )


1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.

Saturday, May 17, 2014

ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்

ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்


ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்
குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
மேலும் குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இத்தகைய ஹெர்னியா இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
இப்போது அந்த குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.
ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!
அதிமதுரம்
குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
இஞ்சி
இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
சீமைச் சாமந்தி டீ
வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.
மோர்
ஹெர்னியா இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று முமுறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.

அல்சரை தவிர்க்க.........!

அல்சரை தவிர்க்க.........!
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர்
வரவே வராது.......!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண்
பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும்
நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால்
ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில்
பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில்
பாலுண்ணி தோன்றியதும்,
வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால்
இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால்
விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால்,
தலைவலி நீங்கும்.......!

Friday, May 16, 2014

கோடைக்கு ஏற்ற பாசிப்பயறு

கோடைக்கு ஏற்ற பாசிப்பயறு

பயறு வகை உணவான பாசிப்பயறு பல்வேறு சத்துகளின் பெட்டகமாக உள்ளது. பண்டைய காலம் முதலே பாசிப்பயறு இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

கடந்த நூற்றாண்டு களில்தான் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. 

பக்கவாதத்தில் இருந்து மீளலாம்

பக்கவாத பாதிப்பு உலகெங்கிலும் பயத்தினை அளித்தாலும், ஒரு மகிழ்ச்சியான செய்தி... இதில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடிய மருத்துவ முன்னேற்றம் சமீபத்திய காலகட்டத்தில் ஏற்பட்டு உள்ளது. பொதுவாக இது 65 வயதை கடப்போருக்கு அதிகமாக பக்கவாத பாதிப்பு காணப்படுகிறது. 

வயதானவர்களைத்தான் இது அதிகமாக தாக்கும் என்பதில்லை. நடுத்தர வயதில் இருப்போருக்கும் வர வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த பாதிப்பு அதிக இயலாமையை கொடுத்து விட்டாலும், தொடர் சிகிச்சை பயிற்சி மூலம் அவர்கள் நல்ல முன்னேற்றம் பெற முடிகிறது. பக்கவாதத்துக்கான அறிகுறிகள்...

Thursday, May 15, 2014

மணமும் மருத்துவ குணமும் கொண்ட தாழம்பூ

தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும்  சக்தியுடையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே  கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது.  

ரத்தம் சுத்தமடைய

முன்னோர் வழங்கிய மூலிகை பட்டிடை


மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங்கருத் திதுதானே


மனித உறுப்புகளில் இன்றியமையாதது கண். இந்த கண்ணை குறித்து பல்வேறு சங்க இலக்கிய பாடல்களும் பேசுகின்றன. ராமாயணத்தில் கூட  ராமனும் சீதையும் இணைவதற்கு அவர்களின் முதல் பார்வை சந்திப்பே முக்கிய காரணம் என வர்ணிக்கப்படுகிறது. குழந்தைகள் படிக்கவில்லை  என்றால், கண்ணை மட்டும் விட்டு விட்டு உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் அடித்து உதையுங்கள் என முன்பெல்லாம் பெற்றோர் கூறுவது  வழக்கம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு, கண். அந்த கண்ணை தினந்தோறும் காப்பதற்கு இயற்கை படைத்த முக்கியமான துணை  உறுப்பு, இமை.

இவ்வளவு பாதுகாப்புடன் அமைந்துள்ள கண்ணை நோய் தொற்றினால் என்ன செய்வது? அதற்கு தான் ஒரு மூலிகையை முன்னோர் வழங்கியுள்ளனர்.  அது, தெய்வத்தன்மையுடைய கோயில்களில் இறைவனுக்கு சாத்தப்படும் பூச்சரங்களில் இடம் பெறக்கூடிய பூ. அதன் பெயர் பட்டிடை. கோயில்  நந்தவன பூங்காக்களில் வளர்க்கப்படும் செடி. எதிரெடுக்கில் கரும்பச்சை நிறத்துடன் இலைகளும், நடுவே வெள்ளை நிற பூக்களும் கொண்ட அழகிய  சிறு செடி. வீட்டு தோட்டங்களிலும் கோயில்களிலும் இது வளர்க்கப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் அழகு செடியாக வளர்க்கின்றனர். 3 முதல் 6  அடி உயரம் வரை வளரும்.

கண் நோய்க்கு பயன்படும் கண் காச மாத்திரை மற்றும் கண் நோய் தீர்க்கும் நண்டுக்கல் பற்பம் ஆகியவற்றில் பட்டிடை சேருகிறது. மேலும் கண்  நோய்க்கு தயாரிக்கப்படும் அனைத்து சித்த மருந்துகளிலும் பட்டிடைக்குதான் முதலிடம். ஆவணங்கள் எழுத உதவும் அழியாத மை தயாரிக்க பட்டிடை  பயன்படுத்தப்படுகிறது. 

வாசனை திரவியங்கள் தயாரிக்கும் பொருட்களிலும் வாசனை நீண்ட காலம் நிலைத்து நிற்க பட்டிடை பயன்படுத்தப்படுகிறது. இரும்பு பற்ற வைக்கும்  தொழிலாளர்கள் கண் சிவந்து தூங்க முடியாமல் வலியால் துடிப்பார்கள். இவர்கள் புதிய பட்டிடை பூவால் ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும்.  பூவை பறித்து தண்ணீரில் கழுவி கண்களை மூடி அதன் மேல் வைத்து மெல்லிய துணியால் கட்டிக்கொண்டு படுத்தால் கண் வலி பறந்து போகும்.  சிவந்த கண்கள் பழைய நிலைக்கு வந்து சேரும்.

நேத்திர வாயுகமழ் நேத்திரபுண் வெட்டருகல்
நேத்திரங் பாலசன்னி நீசவினைக்- கோத்திரங்கள்
மாள நொடுக்குதலால் வாகடர்கைக் கேற்றவச்ர
வாளஞ் சுயோதனனார் மாலை 
என்கிறது தமிழ்பாடல் ஒன்று.

பட்டிடை செடி மற்றும் பூவின் பாலில் நல்லெண்ணெய் விட்டு நன்றாய் கலந்து நெற்றியில் தேய்க்க கண் வலி நீங்கும். பழங்காலங்களில் போரில்  வெட்டு பட்டால் காயம் சீழ் பிடிக்காமல் ஆற பட்டிடை இலைகளை ஒடித்தால் வரும் பாலை பயன்படுத்தினர். இன்றும் கிராமங்களில் இதை  பயன்படுத்தி வருகிறார்கள்.பட்டிடை பூ 50 கிராம், களாப்பூ 50 கிராம் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு பூக்கள் மூழ்கும் வரை நல்லெண்ணெயை ஊற்றி  20 நாள் வெயிலில் வைத்து (இந்த தயாரிப்புக்கு சூரிய புடம் என பெயர்) வடி கட்டி காலை, மாலை வேளைகளில் கண்ணில் ஓரிரு துளிகள் விட்டு  வர பூ, சதை வளர்ச்சி, பலவிதமான கண்படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

இதன் வேரை வாயில் போட்டு மென்றால் பல் வலி நீங்கும். தண்ணீரை சிறிதளவு விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு உள்ளுக்கு கொடுக்க  வயிற்றுப் புழு சாகும். பட்டிடை பூ தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாக எடுத்து கசக்கி கண்களில் இரண்டொரு துளி விட்டு வர கண் பூ விலகும்.  பட்டிடை பூ செண்பகப் பூ, எள்ளுப்பூ இவற்றை சுத்தம் செய்து அதனுடன் துளசி வேர், சங்குப் பொடி ஆகியவற்றில் புளியம் பூ சாறு, எலுமிச்சை சாறு  ஆகியவற்றை அரைத்து நிழலில் உலர்த்தி வைத்து தாய்ப்பாலில் உரைத்து கண்களில் தீட்டி வந்தால் கண் வலி, பூ விழுதல், சதை வாங்கி  முதலியவை தீரும். 

இத்தனை பெருமைக்கும் உரிய பட்டிடை செடி எது தெரியுமா? தினந்தோறும் நாம் எளிதாக பார்க்க முடியும் நந்தியாவட்டை தான்.சங்க இலக்கியங்களில் பெண்கள் விளையாடி மகிழ்ந்த 96 வகை மலர்களில் ஒன்று, இந்த நந்தியாவட்டை. நந்தியாவ நேத்திர வாயுகமழ் நேத்திர புண்  வெட்டருகல், நந்தி பத்திரி, நந்தியா வர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல்வேறு பெயர்கள் இதற்கு உண்டு.

காசம் படலம் கரும்பாவை தோடமெனப்
பேசுவிழி நோய்கடமை பேர்ப்பதன்றி- ஓசைதரு
தந்திபோ லேதெறித்துச் சாருமண்டை நோயகற்றும்
நந்தியாவட்டப்பூ நன்று
 என்கின்றது பழம் பாடல்.

இந்த அரிய மருத்துவ குணம் கொண்ட பட்டிடையாம் நந்தியாவட்டையை தகுந்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று முன்னோர்கள் காட்டிய  வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

முன்னோர் வழங்கிய மூலிகை: தகரை