Friday, August 15, 2014

குழந்தைகள் பிரளி (பேதி)

குழந்தைகள் பிரளி (பேதி)

இது அசீரணத்தால் வரக்கூடியது தாய்பால் கொடுக்கும் பெண்கள் புருஷனோடு சையோகம் செய்து விட்டு பிறகு பிள்ளைக்கு பாலுட்டினால் அந்தப்பால் காமப்பால் ஆவதால் குழந்தைகளுக்கு வயிறுப்பசம் வந்து பல நிறங்களில் பேதியாகும் இப்பிணி எந்த மருந்துக்கும் வசப்படாது 

இதர்க்கு மருந்து :
வேலிப்பருத்தி இலை ஒரு கைப்பிடி சேற்றுப்பு இரண்டு சிடிகைகள் சேர்த்து இடித்து கசக்கிப் பிழிந்த சாறு 5 '6 சொட்டுக்கள் தாய்ப்பால் அல்லது பசும்பாலில் விட்டு காலை மாலை கொடுக்கே 3 நாட்களில் குணமாகும்

மற்றும் ஒரு மருந்து :
கரி மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி ஓரு கோப்பைத் தண்ணீரிலிட்டு காய்ச்சி அரை கோப்பையாய் சுண்டியவுடன் எடுத்து வேளைக்கு ஓரு சங்கு வீதம் அரை மணிக்கொரு முறை ஓரு சிடிக்கை பவழ பற்பம் கூட்டி கொடுக்க இரண்டு நாட்களில் குணமாகும் பவழ பற்பம் கிடைக்காதவர்கள் மஞ்சள் பொடியுடன் அதனளவு வெத்திலையில் சேர்க்கும் சுண்ணாம்பை உலர்த்தி சேர்த்து அரைத்துக்கொண்டு வெண்ணீரில் கலக்கி அரை மணிக்கொருமுறை உள்ளுக்குக் கொடுக்கவும்

மற்றொரு முறை :

வசம்பை சுட்டுக் கரியாக்கி தூள் செய்து கால் தேக்கரண்டி அளவு வென்னீரில் கலக்கி நாள் ஒன்றுக்கு 4 முறை கொடுக்கவும் சிசுக்களுக்கு 2 சிடிகை முதல் வயதிற்கேற்றவாறு கூட்டிக் குறைத்துக் கொடுக்கவும் நன்றி திருசிற்றம்பலம்

No comments:

Post a Comment